நபி ஸல் அந்நிய பெண்ணுடன் நெருங்கிப் பழகினார்களா?






நபி ஸல் அந்நிய பெண்ணுடன் நெருங்கிப் பழகினார்களா? உம்மு ஹராம் ரலி தொடர்பாக வந்துள்ள செய்தியை மறுக்கும் கூட்டத்திற்கு ஒரு பதிலுரை
றஸ்மி மூஸா சலபி
---------------------------------------------------------------------------------------------------------------
அன்சாரி குலத்தை சேர்ந்த உம்மு ஹராம் என்ற நபி தோழியரின் வீட்டுக்கு ஒரு நாள் நபி ஸல் அவர்கள் சென்று அவர்கள். அந்த நபி தோழியருக்கு அருகில் உறங்கினார்கள். அந்த நபித் தோழியர் நபி ஸல் அவர்களுக்கு தலையில் பேன் பார்ப்பார்கள், உணவளிப்பார்கள் “புஹாரி செய்தியாகும்  (2895  2789 ....)
 மேற்குறித்த அமைப்பில் சில செய்திகள் பதிவு செய்யப்பட்டுள்ளன .இவை ஆதாரமான செய்திகள் .
மேலே  குறிப்பிடப்பட்ட பெண் யார் என்றால்  இவர்  அனஸ் ரலியின் சின்னம்மா ஆவார். அதாவது அனஸ் ரலியின் தாயின் சகோதரி ஆவார்

இந்த செய்தியின் வரும் பிரச்சினை என்ன ?

அந்நிய பெண்ணுடன் இப்படி நபி ஸல் இப்படி தோழமை வைப்பதா?அதுவும் அல்லாஹ்வின் தூதர் இப்படி செய்திருப்பரகளா ?என்பதுதான்

நபி ஸல் அவர்களை தொட்டும் இப்படியான ஒரு செய்தி வந்து அது  எமக்கு விளங்காவிட்டால் அதை உரிய முறைப்படி பகுப்பாய்வு செய்ய வேண்டும். உரிய விளங்கம் கிடைக்காவிட்டால்  விளக்கம் கிடைக்கும் வரை அமைதியாக இருக்க வேண்டும். மாறாக நபி ஸல் அவர்களின் ஆதார பூர்வமான  செய்திகளை ஒரு போதும் நிராகரிக்கக் கூடாது 

மேலும் இந்த செய்தி உண்மையானது ஆதாரபூர்வமானது  என்றாலும்  இது தொடர்பாக சிலரால்இந்த செய்தியை  நிராகரிக்க முன் வைக்கப்படும்   யூகங்கள் பிளையானவனை .அவை என்ன ?

11-  நபி ஸல் உம்மு ஹராம் ரலி அவர்களின் மடியில் உறங்குவதாக வரும் செய்தியில் அவர்கள் மடியில் உறங்குவார்கள் என்பதற்கு எவ்வித ஆதாரமுமில்லை .அது பிழையான ஒரு மொழி பெயர்ப்பு .

12-  மேலும்  இது அஜ்னபி மஹ்ரமி என்ற சட்டம் இறங்குவதற்கு முன்னர் நடை பெற்றுள்ளது என்றும் எடுத்துக் கொள்ளலாம் ஏனனில் ஹிஜாபுடைய சட்டம் நபி ஸல் அவர்களுடைய மனைவியர்களுக்கு மட்டும்தான் என்பதால் உம்மு ஹராம் ரலிக்கு  இந்த ஹிஜாப் சட்டம் பொருந்தாது  .

23-    பக்கத்தில் உறங்குவார்கள்  என்பதற்கு அன்னியோன்னியமாக என்று நாம் கற்பனை பண்ணுவது பிழையானது. ஹதீஸில் பயன்படுத்தப்பட்டுள்ள  கரீப் قريب என்ற அரபு சொல்லுக்கு அர்த்தம் அருகாமையில்   என்பதை தான் எடுத்துக் கொள்ளவேண்டும் .அருகாமைக்கு அளவு என்பது நிர்ணயம் இல்லை 

 4- நபி ஸல் அவர்கள் உடலோடு சேர்ந்து தூங்குவார்கள் என நாம் கற்பனை பண்ண முடியாது என்பதால் இதனை நாம் அந்த அர்த்தங் கொள்ள முடியாது உதாரணமாக அடுத்த மாதம் அண்மித்து திருமணம் எனக்கு நடை பெரும் என்று ஒருவர் கூறினால் நாம் எப்படி அதை விளங்குவோம் அதே போன்றுதான் கரீப் என்பது ஏதோ ஒரு அண்மித்த இடம் அல்லது காலம்  என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும் .குறிப்பாக நபி ஸல் அவர்களை தொட்டும் பிழையாக விளங்கக் கூடியவாறு நாம் மொழி பெயர்க்க கூடாது .

35-   மேலும் நாம் இந்த நிகழ்வு அடிக்கடி  நடந்தாதாக இல்லை ஒரு தினம் என்றுதான் புஹாரியில் வரும் பல செய்திகள் கூறுகின்றது .எனவே இது ஒரு சந்தர்ப்பம் நபி ஸல் அவர்கள் குறிப்பாக சிலருடன் இப்படி நடந்த  ஒரு தனிபட்ட செயற்பாடு

46-   அடுத்தது இது நபி ஸல் அவர்களும் உம்மு ஹராம் றழியும் தனியாக இருந்து நடை பெற்றிருக்கும் என்றும் நாம் நினைக்க கூடாது. அவர்கள் உபாதத் இப்னு சாமித் ரலியின் மனிவியாக இருந்தார்கள் அங்கு ஒரு வீடு என்னும் போது வேறு யாரும் உறவினர்கள் இருந்திருக்க மாட்டார்கள் என்று கூற முடியாது .தனது கணவரே இருந்திருக்கலாம். எனவே சுருக்கமாக கூறப்படும் ஒரு ஹதீஸில் அவைகளை பற்றி விரிவாக கூற முடியாது ஹதீஸ் என்பது சுருக்க வாக்கியம் . மேலும் ஒரு பெண்ணுடன் மஹ்ரமி ஒருவர் இருக்காத நிலையில் தனிமையில் இருக்க வேண்டாம் “ என்று கூறிய நபி அவர்கள் தனிமையில் இருந்திருப்பார்கள் என்று நாம் கற்பனை பண்ணக்  கூடாது ..

  7-   மேலும் நபி ஸல் அவர்களுக்கு உம்மு ஹராம் பாலூட்டியவர் என்ற மிகவும் வலுவில்லாத ஒரு செய்தியும் இதற்க்கு வலு சேர்கின்றது .

மேற் குறித்த காரணங்களின் அடிப்படையில்   நாம் இந்த செய்தியை நிராகரிக்கும் அளவுக்கு நபி ஸல் என்னதான் செய்தார்கள்? அந்த வீட்டில் சாப்பிட்டார்கள். மேலதிகமாக உம்முஹராம் அவர்கள் நபி  ஸல் தலையில் பேன் பார்த்தார்கள் என்பது அவ்வளவுதான் .ஏன் இதனை  தனிபட்ட  ஒரு சம்பவமாக  கருத முடியும் என்றால் உம்மு ஹராம் அவர்களுக்கு நபி ஸல் அங்கே தூங்கி எழுந்தவுடன் சொன்ன ஒரு கனவில் ‘ ஒரு காலம் வரும் அப்போது எனது சமூகம் கடலில் டாம்பீக அரசர்கள் போல் செல்வ செழிப்பாக கப்பலில் செல்வார்கள் “ என கூற அதற்கு  உம்மு ஹராம் ரலி  அவர்கள்  தானும் நபி ஸல் கூறிய அந்த நல்ல கூட்டத்தில் சேர பிராத்திக்கும் போது நபி ஸல் அவர்கள் அதை ஏற்று பிரார்த்தனை செய்தார்கள் என்பது இந்த ஹதீசில் வந்துள்ளது .இத்தனைக்கும் உம்மு ஹராம் ரலி வயதில் மூத்த மற்றும் ஆசைப் பருவங்க்களை கடந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 .
 எனவே இப்படியான ஒரு நிலையில் இதை எப்படி அணுகப் படவேண்டும் என்றால் நபி ஸல் அவர்களுக்கு இது ஒரு தனிபட்ட செய்தி .எப்படி நபி ஸல் அவர்கள் தனிபட்ட சில விடயங்களை செய்தார்களோ அதே போன்ற ஒன்றுதான் இது தனது சேவகர் அனஸ் ரலி அவர்களுடன் இருந்த ஒரு உறவில் அங்கு சென்றிருப்பார்கள்

ஒரு பெண்ணோடு இப்படி நடந்தார்கள்  என்பதற்காக நபி ஸல் அவர்களுடைய நபி என்ற அந்தஸ்தை மீறி இதை ஒரு பெண்ணோடு நபி இப்படி நடந்திருப்பார்கள என்று நாம் கற்பனை பண்ண  முடியாது ஏனனில் இத்தனைக்கும் உம்மு ஹராம் தலையில் பேன் மட்டுமே பார்த்துள்ளார்கள் ஏனையவை எல்லாம் நமது பிழையான கற்பனைகள்

இமாம் ஹாபிள் இப்னு ஹஜர் சொல்வது போல் இது நபி ஸல் அவர்களுக்கு தனிப்பட்ட ஒரு செயற்பாடு .அவர் அஜ்னபி  ஏற்ற ஒரு நிலைய இருந்தாலும் அந்தப் பெண்ணின் வயது மற்றும் தனது சேவகர் அனஸ் ரலியின் மீது கொண்டுள்ள அன்பு அவருடைய குடும்பத்தை இப்படி நோக்கச் செய்துள்ளது .மேலும் எப்படி அந்தக் குடும்பங்கள் ஆழமாக நடந்துள்ளார்கள் என்று நமக்கு செய்திகள் அறியாத நிலையில் நமக்கு கூறப் பட்ட ஒரு சில வரிச் செய்தியை கொண்டு சம்பவங்களை  மதிப்பிடக் கூடாது.


குறிப்பு
------------
இதனை தவிர வேறு விடயங்க்களை கொண்டு இந்த ஹதீஸை இப்படி இருக்கலாம் அப்படி இருக்கலாம் என்று நாம்   நியாயயப்படுத்தவேண்டிய அவசியம் இல்லை .மேலும் ஆதாரம் இல்லாத விடயங்களை கொண்டு அலசவும்  தேவை இல்லை இஸ்லாமிய வரம்புக்குள்ளும் நபி ஸல் அவர்களின் சிறப்பு செயற்பாடு என்ற அமைப்பிலும் நாம் நோக்கினால் தெளிவான விடை கிடைக்கும்   அல்லாஹ் மிகவும் அறிந்தவன் .

சலபி என்ற பதம் எத்தகைய பரிமாணங்களைக் கொண்டது ?


சலபி என்ற பதம் எத்தகைய பரிமானங்களைக் கொண்டது ?
ஆய்வறிக்கை .முதுமானி - றஸ்மி மூஸா சலபி 



ஆய்வுத் தொடர் அஷ்ஷேக்  றஸ்மி மூஸா சலபி

சலபி என்ற அரபு சொல் இஸ்லாமிய கண்ணோட்டத்தில் என்ன அர்த்தம் கொள்ளப்படுகின்றது .சலப     سلف என்ற அரபு சொல் அகராதியில்  تقدم என்ற முன் சென்றான் அர்த்தமும் அதே வேளை இதன் பரிபாஷையில் முன் சென்ற நல்வழியில் நடந்த சஹாபாக்கள் தாபியீன்கள் மற்றும் நல்ல அடியார்களை குறிக்க அர்த்தம் கொள்ளப் படுகின்றது  இந்த அடிப்படையில் சலபி என்ற சொல் யாரெல்லாம் உண்மையான நபி ஸல் கூறிய  அடிப்படையில் மார்க்கத்தை தூயமையாக பின் பற்றறுகின்றனரோ அவர்களை குறித்து பயன் படுத்தப்படுகின்றது அதனாலதான் சலபு சாலிஹீன் என்ற சொல்நான் மேலே கூறிய அர்த்தத்தில் பயன் படுத்தப் படுகின்றது .

இதற்கு எதிராக பயன்படுதப்படும் ஹலபி என்ற சொல்லைப் பொறுத்த வரையில் இது இஸ்லாமிய சரியாச் சட்டங்களுக்கு முரண்பட்டு தனது வணக்க வழிபாடுகளை பித்அதுக்கள் நிறைந்ததாக அமல் செய்கின்றாரோ அதனை சுட்டுவதற்கும் சலபி என்ற சொல்லை வேறுபடுத்திக் காடடுவதற்க்கும் இந்த ஹலபி என்ற சொல் பயன்படுத்தப்பட்டு வந்தது குறிப்பாக இமாம் முகம்மத் பின் அப்துல் வஹாப் ரஹ்  அவர்களுடைய தூய இஸ்லாமிய புரட்சியோடு  இந்த சொல் மிகவும் பிரபலமானது ஆனாலும் அதற்கு முன்னர் இது பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது

இஸ்லாத்தில் இந்த சொல்லின் அர்த்தத்தை நாம் புரிந்து கொள்ள சூரா மாயிதாவில் அல்லா கூறுகின்ற ஹஜ்ஜில்  வேட்டை யாடுவது தொடர்பாக அதன் தெண்டங்களைப் பற்றிக்  கூறும்போது தவறுதலாக இதற்கு முன்னர் அறியாமல் இந்தக் குற்றத்தை  செய்தவர்கள் عفا الله عما سلف    அல்லாஹ் மன்னித்து விட்டான் என்று கூறுகின்றான் .இங்கு சலப என்ற சொல்லை பயன் படுத்துகின்றான்

அதே போன்று ஹலபி என்ற விடயத்தை நாம் விளங்கும் போது அல்லாஹ் கூறுகின்றான் خلف من بعدهم خلف أضاعوا الصلاة وأتيعوا الشهوات  என்று பின்னால் ஒரு கூட்டம் சென்றது அவர்கள்  தொழுகையை வீணடித்து மனோ இச்சைகளை பின்பற்றியோர் எனக் கூறுகின்றான்” எனவே இங்கு இது தொடர்பான புரிதல் குரான் சுன்னாவில் இருந்துதான் பெறபட்டிருக்க வேண்டும் என்பதை நாம் புரிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது
இதனால்தான் கூறுவார்கள் كل خير من اتباءهم من سلف ,كل شر من إتباءهم من خلف  என்பதாக.

நபி ஸல் அவர்களிடத்தில் ஒரு மனிதர் வந்து தான் ஜாஹிலியாக் காலத்தில் தர்மம் மற்றும் உறவுகளை பேணி நடந்ததாகவும் தனக்கு அதில் நன்மை உண்டா? என்று கேட்டார் அதற்கு நபி ஸல் அவர்கள் நீ உனக்கு முன் சென்ற நல்லவர் வழியில்தான் இந்த இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டாய் எனக் கூறினார்கள் இங்கு اسلمت علي من سلف لك من خير  என்றுதான் கூறினார்கள் எனவே சலப் என்ற சொல் முன் சென்றவர்கள் அதாவது நல்லடியார்கள் வழி என்பது எமக்கு இதன் மூலம் தெளிவாக புரிகின்றது 

இது தொடர்பாக இப்னு மன்லூர் அவர்கள் கூறும் போது سلف ,سليف , سلفة  போன்ற சொற்களும் இதற்க்கு நிகராக பயன்படுத்தப்படுகின்றது எனக் கூறுகின்றார் அதாவது அதே வார்த்தையில் வரும் சொற்களாக இவை உள்ளது .மேலும் சேஹ்க் இப்னு பாஸ் கூறும் போது இதற்கு நிகராக أثري  என்ற சொல்லும் பயன்படுத்தப் படுவதாக கூறுகின்றார் .இதுவும் சலபி என்ற அர்த்தத்தைத்தான் கொடுகின்றது .இதை நாம் ஹதீஸ் கலையில் காணக் கூடியதாக உள்ளது 

எனவே சலப் என்ற பதம் சஹாபாக்கள் முதல் கொண்டு பின்னால் வந்த தாபியீன்கள் தபஉ தாபியீன்கள் மற்றும் சாலிகான நல்லடியார்கள் போன்ற வர்களை குறிக்கப் பயன்படுத்தப்படும் இதனை சேஹ்க்  ஸாலிஹ் அல் உதைமீன் சேஹ்க்  அல் பவ்சான் போன்ற நவீன கால அறிஞஜர்களும் இதனை கருத்தாகவும் கொள்கையாகவும் கொண்டுள்ளனர்
அல்லாஹ் “முஹாஜிர்களிலும் அன்சார்களிலும் நல்ல விடயங்களை பின் பற்றுவார்கள் அல்லாஹ் அவர்கள் பொருந்திக் கொண்டான் ..........எனக் கூறி முன் சென்ற நல்லடியார்கள் பற்றிக் கூறுகின்றான் இவர்கள்தான் அந்த சலபு சாலிஹீன்கள்

 இன்னோர் இடத்தில்” ஈமானை கொண்டு முந்தியவர்கள் “எனக் கூறுகின்றான் இதே போன்று நபி ஸல் அவர்களும் சஹாபாக்களை பற்றி அவர்களை பின் பற்றுவது பற்றிக் கூறுகின்றார்கள் எனவே சலபு சாலிஹீன்கள் என்பது சஹாபிகள் தாபியீன்கள் போன்று குறிப்பிட்ட ஒரு வர்க்கம் இல்லாவிட்டலும் இஸ்லாத்தை தூய்மையாக பின் பற்றிய ஒரு கூடத்தை குறித்து நிக்கின்றது குறிப்பாக பித்தத் மற்றும் சிர்க் நிறைந்த ஒரு சமூகத்தில் நின்று  வேறு பிரித்துக் காடடுவத்ற்கு இந்த சொல் அதிகம் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது .

.இந்த அடிப்படையில் சலபிய என்ற அரபு தாருத் தௌஹீத் அஸ்ஸலபியா கலாசாலை என்பது அது ஒரு கல்லூரியின் பெயர் அதிலிருந்து வெளியகின்றவர்களுக்கு சலபி பட்டம் என்பது அது ஒரு பாரம்பரியம். எனவே அதனை கொண்டு சலபு சாலிஹீன்கள் என்று நாம் கருதுபவர்களுடன் ஒப்பிடக் கூடாது .சலபி பட்டம் பெற்ற ஒருவர் சலபியாக இருப்பார் என்பதும் அர்த்தமல்ல .


ஆய்வு இரண்டாம் பகுதி

எனது முதலாவது பதிவில் சலபி தொடர்பாக இஸ்லாமிய உலகில் என்ன நிலைபாட்டில் காணப்படுகின்றது என்பதை நான் தெளிவுபடுத்தினேன் .அடுத்தாக இந்த சலபி என்ற சொல் ஏன் இஸ்லாமிய வரலாற்றில் இடம் பிடித்தது என்பதையும் சுட்டிக் காட்டினேன் (முன்னைய பதிவில் ) “ஹலபி என்ற சொல்லைப் பொறுத்த வரையில் இது இஸ்லாமிய சரியாச் சட்டங்களுக்கு முரண்பட்டு தனது வணக்க வழிபாடுகளை பித்அதுக்கள் நிறைந்ததாக அமல் செய்கின்றாரோ அதனை சுட்டுவதற்கும் சலபி என்ற சொல்லை வேறுபடுத்திக் காடடுவதற்க்கும் இந்த ஹலபி என்ற சொல் பயன்படுத்தப்பட்டு வந்தது”

(முன்னைய பதிவில் ) மேலும் “ எனவே சலபு சாலிஹீன்கள் என்பது சஹாபிகள் தாபியீன்கள் போன்று குறிப்பிட்ட ஒரு வர்க்கம் இல்லாவிட்டலும் இஸ்லாத்தை தூய்மையாக பின் பற்றிய ஒரு கூடத்தை குறித்து நிக்கின்றது குறிப்பாக பித்தத் மற்றும் சிர்க் நிறைந்த ஒரு சமூகத்தில் நின்று வேறு பிரித்துக் காடடுவத்ற்கு இந்த சொல் அதிகம் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது 

இந்த அடிப்படையில் ஒரு விடயத்தை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும் சலபிகள் என்று மக்கள் அடையாளப் படுத்தும்  அறிஞ்சர்கள் எல்லாம் இஸ்லாமிய தூய  சிந்தனையில் இருப்பார்கள் என்று நாம் கூற முடியாது. இதனால்தான் நான் ஆரம்பத்தில் கூறிய சில அரபுக் கலூரிகளில் வளங்கப்படும் சலபு பட்டங்களைக் கொண்டு  இதனை மதிப்பிடக்கூடாது என்பதாக எனினும்  இத்தகைய பட்டம் பெற்றவர்கள் பெரும்பாலும்  சுன்னாவுக்கு மாற்றமாக நடக்க முனையமாட்டார்கள் என்பதை நாம் அழுத்திக் கூறலாம் .
அதே நேரம் சில இந்திய மற்றும் இலங்கை அறிஞ்சர்கள் புதிய ஹதீஸ் மறுப்புக் கொள்கை என்ற விவகாரத்தை கையில் எடுத்து குறிப்பாக சலபிகள் என்று பட்டம் பெற்ற ஆலிம்களை தாக்க முய்ற்சிகின்றனர். இது ஏற்றுக் கொள்ள முடியாத விடயம் ஏனனில் . மரபு சார்ந்த மார்க்கத்துக்கு முரண் இல்லாத முறைமை ஒன்றை ஒரு போதும் நாம் விமர்சனம் செய்யக் கூடாது இது வெறும் ஒரு காழ்புணர்வு  செயற்பாடு என்பதை நாம் புரிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது .

சமுதாயத்தில் இன்று தௌஹீத் மேலோங்கி இருப்பதற்கு சலபுகள்  என்று அடையாளப் படுத்தப் பட்ட பலர் கால்கோளாக இருந்துள்ளனர். இன்றும் இருந்து கொண்டிருகின்றனர் .சமுதாயம் இவர்களை இப்படி அடையாளப் படுத்திய காரணம் தான் இன்று இப்படி தூய இஸ்லாம் சமூகத்தில் மேலோங்க காரணம் எனலாம். எனவே அடையாளப் படுத்தல் கூடாது என்று நாம் வாதிட்டால் ஏன் தௌஹீத் வாதிகள் என்று நம்மை நாம் அடையாளப் படுத்துகின்றோம் இதற்க்கு மார்க்கத்தில் ஆதாரம் உண்டா ? தௌஹீதி என்று சிலர் பட்டப் பெயர் மட்டுமல்ல அரபுக் கல்லூரிகல்  கூட உண்டு அல்லவா ? ஏன் நாம் எதிர் மறையாக மற்றவர்களை பித்தத்வாதிகள் என்று அடையாளப் படுத்துகின்றோம் ? சிலவேளை இந்த வாதத்தில் இருந்து தப்ப நாங்கள் அப்படி கூறவில்லையே என்று வாதிட முனையக் கூடாது

எனவே ஒன்றிலிருந்து ஒன்றை வேறு படுத்த சில அடையாளங்கள் அவசியம் அதைதான் நாம் சலபு சால்ஹீன்கள் என்று கூறுகின்றோம் ஆனால் நபி ஸல் அவர்கள் இதற்கு வழி காடினார்களா ? என்றால் இல்லை என்றுதான் நாமும் கூறுகின்றோம் ஏன் ?

நபி ஸல் ஆலிம் என்று ஒருவரை அழைக்க வழிகாட்டவில்லை .மவ்லவி என்பதற்கும் அவர்கள் வழிகாட்டவில்லை. சேஹ்க் என்பதற்கும் வளிகாடடவில்லை. சலபி என்பதற்கும் வழிகாட்டவில்லை. உலவி என்பதற்கும் வழி காட்டவில்லை. தௌஹீதி என்பதற்கும் வழிகாட்டவில்லை  ஆனால் இவை இஸ்லாத்துக்கு முரண் இல்லை எபதனால் நாம் மரபாக கொண்டு இவைகளை அடையாளப் படுத்துகின்றோம் .அவ்வளவுதான்

இன்று ஒரு நூல் அரபியில் இருந்தால் அதை எழுதியவர் சலபு கொள்கை சார்ந்தவர ? என்று ஏன் நாம் அலசுகின்றோம் என்றால் அந்த நூலில் பிழைகள் வழுக்கள் மார்கத்துக்கு முரணான பல விடயங்கள் பெரும்பாலும் இருக்காது என்பதால் மட்டுமே இது ஒரு பொது சிந்தனை எனவே அடையாளப் படுத்தல் கட்டாயமானது .இந்த அடிப்படையில்தான் இஸ்லாமிய வரலாறு சலபுசாலிஹீன்கள் என்று அறிஜர்களை அடையாள படுதியது என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்

எனவே நமது முன்னோர்களை அதாவது தூய சிந்தனையில் இருந்தவர்களை இப்படி அடையாளப் படுத்துவதில் மார்க்கத்தில் எந்த எவ்வித தப்பும் கிடையாது .அதே நேரம் இவர்களை கண்மூடித்தனமாக பின்பற்ற வேண்டும் என்றும் நாம் நினைப்பது மிகவும் மடமையானது அல்லாஹ் மிகவும் அறிந்தவன் (தேவை ஏற்படின் தொடரும் இன்சா அல்லாஹ் )




முன் சென்ற நபிமார்களின் சட்டங்கள் நமக்கு பின்பற்ற வேண்டிய பொது நடைமுறை சட்டங்கள் இல்லை.


முன் சென்ற நபிமார்களின் சட்டங்கள் நமக்கு பின்பற்ற வேண்டிய பொது நடைமுறை சட்டங்கள் இல்லை.

ஆய்வு -  அஷ்சேக் றஸ்மி மூஸா சலபி .

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

சூனியம் தொடர்பான வியாக்கியானங்களுக்கு பதிலுரை 

.
சூனியம் பற்றிப் பேசும் போது அல்லாஹ் குர்ஆனில் கூறும்  ஹாரூத் மாரூத் என்ற இருவர் தொடர்பான சம்பவம் பற்றி பல வியாக்கியானங்கள் காணப்படுவதை நாம் காணலாம்.இந்த இடத்தில தமிழுலக இஸ்லாமிய அறிஞ்சர்கள் விடும் மிகப் பெரிய தவறு இஸ்லாத்தின் மிக முக்கியமான சட்ட நுணுக்கம் பற்றி அறியாமையாலாகும்  .அதாவது நபி ஸல் அவர்களுக்கும் மூசா நபிக்குமிடையில் இடம் பெற்ற சூனியம் தொடர்பான சம்பவத்தை  அணுகும் போது ஒரு சட்ட நுணுக்கத்தை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் .அதாவது இன்றுள்ள வணக்க வழிபாடுகள் முன்னுள்ள நபிமார்களின் வணக்கங்களுடன் பெயரால் ஒன்றாக இருந்தாலும் கருத்திலும் செயல் வடிவத்திலும் வித்தியாசமானது என்பதை புரிந்து கொள்ளவேண்டும் .எனவே முன் சென்ற நபி மார்களின் வரலாறுகள் அல்லது சட்டங்கள் என்பது எமது அதாவது முஹம்மத் நபியுடைய சமூகத்துக்கு ஒரு போதும் சட்டமாகாது இதை  நாம் தெளிவாக  புரிந்து கொண்டால் இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வை   பெற்று கொள்ள முடியும்.

இங்கு பிரச்சினை என்னெவென்றால் நபி ஸல் அவர்களுக்கு ஏற்பட்ட சூனியம் எனும் செயற்பாடு இஸ்லாத்தில் இல்லை என்ற ஒரு சிலரின் வாதமே. இவர்களுடைய அடிப்படை வாதத்திற்கு காரணம் முன்னுள்ளநபிமார்களின் சம்பவங்களை நபி (ஸல்)  அவர்களுடன் ஒப்பிட்டு நோக்கியதுதான்.  இந்த பிழையான அணுகு முறைதான்  நபி ஸல் அவர்களின் சஹீகான பல நபி மொழிகளைகூட நிராகரிக்கக் காரணம் ஆகும்.

அல்லாஹ் ஒவ்வொரு சமூகத்துக்கும் நபிமார்களை அந்தந்த  சமூகத்தின் தேவை கருதியே அனுப்பியுள்ளான் என்பதை நாம்   வரலாறுகளை புரட்டிப் பார்க்கும் போது அறிந்து  கொள்ளலாம் .ஆதம் நபி முதல் கடைசியாக வந்த சகல நபி மார்களும் தங்களுடைய சமூக அமைப்புக்கேற்ப வித்தியாசமான அமைப்புகளில்   நபியாக  அனுப்பப்பட்டுள்ளனர். அவர்கள்  அனுப்பப்பட்ட காலம் மற்றும் வாழ்வியல் அமைப்பு   சமூகவியல் நோக்கில் மிகவும் வித்தியாசமானது . ஒவ்வொரு சமூகத்தின் தட்ப வெட்ப சூழலுக்கேற்ப அல்லா நபிமார்களை தேர்வு செய்தான். இது நாம் வரலாற்றில் கற்றுக் கொண்ட  பாடம்.

ஒரு பலமுள்ள சமூகத்துக்கு கடமைகளை  ஏற்றத்தாழ்வாக வழங்கப்படுவது  என்பது ஓர் சமூகவியல் நடைமுறை. உதாரணமாக 5 வயது குழந்தைக்கும் 50 வயது குழந்தைக்கும்  வளங்கப்படும் கடமைகள் மற்றும் அவர்களின் செயற்திறன்கள் என்பது வேறுபட்டது. இந்த வகையில் காலத்துக்கு ஏற்ப ஆயுள் நீடிக்கப்பட்ட மற்றும்  சக்தி பலமாக வளங்கப்பட்ட ஒரு சமூகத்துக்கு அல்லா மிகையான செயற்பாடுகளை வழங்கியுள்ளான் என்பது இயல்பானது .இதில் நாம் மூக்கை நுழைத்து சிந்திக்க வென்றிய அவசியம் இல்லை.

மேலும் இதை எவ்வாறு நாம் விளங்கிக் கொள்ள வேண்டும் என்றால் புராதன காலம் முதல் இன்று வரை மனித சமூகத்தின் உடலியல் விருத்தி  ஆயுள் காலம் மற்றும் உடலமைப்பு என்பனவைகள் மிகவும் வித்தியாசமானவை ,அவர்களுக்கு கொடுக்கப்பட்ட சக்தி  என்பன கூட வேறுபட்டவை உதாரணமாக சொல்வதானால் அல்லாஹ்வால்  அனுப்பப்பட்ட நபிமார்களையே நாம் குறிப்பிடலாம் .ஆதம் அலை அவர்களை அல்லாஹ் சுவர்க்கத்தில் குடியேறச் செய்தான்  அவர்களுக்கு சகல அம்சங்களையும் சுவர்க்கத்தில் வழங்கினான் . அதே வேளை   நூஹ் நபி அவர்கள் 950 வருடங்கள் வாழ்ந்ததாக கூறப்படுகின்றது  . தொடர்ந்து வந்த நபிமார்களும் இதே வயது ஏற்றதாழ்வு அடிப்படையில் படைக்கப்பட்டனர் இந்த விடயம் பைபிளும் குறிப்பிடப் பட்டுள்ளது. கிறிஸ்துவுக்கு முன் (2334- 2279) இருந்த  அக்காடியன் என்ற மொழிகளிலும் இது பற்றிக் கூறப் பட்டுள்ளதாக வரலாறுகளில் காணக் கூடியதாக உள்ளது .

.இந்தவகையில் சுலைமான் நபி  930 வருடங்களும் ,சுஐப் நபி  882 வருடங் களும்  சாலிஹ் நபி 586 இத்ரீஸ் நபி 356 ஹூத் நபி 265 சகரியா நபி 207 இப்ராஹிம் நபி 195 சுலைமான் நபி 150 அய்யூப் நபி 146 மூசா 125 நபி யாக்கூப் 139 நபி யூசுப் நபி 110 யஹ்யா நபி  95 என்ற வயது அடிப்படையில் வாழ்ந்தாதாக சரித்திரங்கள் கூறுகின்றது. இந்த வயதுகள் சிலவேளை ஓரிரு வயது வித்தியாசங்கள் கூடிக் குறைத்தாலும் இங்கு நான் இதை கொண்டு வந்தது வயதை பற்றிய ஆய்வுக்காக அல்ல மாறாக புராதன வரலாறுகளில் இப்படிதான் மனித வாழ்க்கை இருந்துள்ளது என்பதை சொல்ல வந்தேன் .இந்த வகையில் நபி ஸல் அவர்களுடைய சமூகத்துக்கு அறுபது அல்லது எழுபது வருடங்கள் அவ்வளவுதான் .அதனாலதான் முன்னுள்ள நபிமார்களுக்கு கொடுக்கப்பட்ட பலமான எந்த சக்தியும் முகம்மத் நபிக்கு கொடுக்கப்படவில்லை.

நபிமார்கள் அனுப்பப் பட்ட சூலல் என்பது அந்த சமூகத்துக்கு உரியது அவர்களின் உயரம் ,நிறம் ,ஆயுள் காலம் என்பன அந்த சமூகத்துக்கு அனுப்பப்படும்  நபிக்குரிய பண்புகள் அல்ல மாறாக அந்த சமூகத்தில் வாழும் மக்களின் சமூக கட்டமைப்பு எனவே நபி மட்டுமல்ல அந்த சமூகம் அனைத்துமே நபியை போன்றுதான் இருப்பார் என்னில் ஒரு நபி அந்த சமூகத்தில் இருந்துதான் வருவார் உதாரணமாக சுலைமான் நபி 950 வருடங்கள் வாழ்ந்தனர் அதே போல்  அவர்களின் உயரம் என்பன மிகப் பிரமாண்டமாக இருந்ததாக  கூறப்படுகின்றது  

இதே போன்று சுலைமான் நபிக்கு ஜின்கள் மட்டுமல்ல அவரின் ஆட்சியில் இருந்த    தனி மனிதனுக்கு கூட அவ்வாறான சக்தியை வழங்கி இருந்தான். சுலைமான் நபியின் வரலாற்றில் வரும் பல்கீஸ் அரசின்  சிம்மாசனத்தை ஒரு மனிதனே  கொண்டு வந்தார் என்பதை நாம் குர்ஆனில் பார்கின்றோம்   இதை அல்லா இவ்வாறு குர்ஆனில் கூறுகின்றான் பிரமுகர்களே! அவர்கள் என்னிடம் வழிபட்டவர்களாக வருமுன், உங்களில் யார் அவளுடைய அரியாசனத்தை என்னிடம் கொண்டுவருபவர்?” என்று (ஸுலைமான் அவர்களிடம்) கேட்டார். ஜின்களில் (பலம் பொருந்திய ஓர்) இஃப்ரீத் கூறிற்று; நீங்கள் உங்கள் இடத்திலிருந்து எழுந்திருப்பதற்கு முன் அதை நான் உங்களிடம் கொண்டு வந்து விடுவேன்; நிச்சயமாக நான் அதற்கு சக்தியுள்ளவனாகவும், நம்பிக்கைக்கு உரியவனாகவும் இருக்கிறேன்.
இறைவேதத்தின் ஞானத்தைப் பெற்றிருந்த ஒருவர்: உங்களுடைய கண்ணை மூடித்திறப்பதற்குள், அதை உங்களிடம் கொண்டு வந்து விடுகிறேன்என்று கூறினார்; (அவர் சொன்னவாறே) அது தம்மிடம் வைக்கப்பட்டிருப்பதைக் கண்டதும்: இது என்னுடைய இறைவனின் அருட்கொடையாகும் நான் நன்றியறிதலுடன் இருக்கின்றேனா, அல்லது மாறு செய்கிறேனா என்று (இறைவன்) என்னைச் சோதிப்பதற்காகவும்; எவன் ஒருவன் (இறைவனுக்கு) நன்றி செலுத்துகின்றானோ அவன் நன்றி செலுத்துவது அவனுக்கே (நன்மை)யாவும்; மேலும், எவன் (நன்றி மறந்து) மாறு செய்கிறானோ (அது அவனுக்கே இழப்பாகும்; ஏனெனில்) என் இறைவன், (எவரிடத்தும்) தேவைப் படாதவனாகவும், மிகவும் கண்ணியம் மிக்கவனாகவும் இருக்கின்றான்என்று (ஸுலைமான்) கூறினார்.( 27-1)
மேலும்  சுலைமான் நபிக்கு வளங்கபட்ட  சக்தியின் ஒரு வடிவத்தை நாம் விளங்கிக் கொண்டால் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:) இறைத்தூதர் சுலைமான் (அலை) அவர்களுக்கு அறுபது துணைவியர் இருந்தார்கள். சுலைமான் அவர்கள் (ஒரு முறை) 'இன்றிரவு நான் என் துணைவியர் அனைவரிடமும் தாம்பத்திய உறவுகொள்ளச் செல்வேன். ஒவ்வொரு துணைவியாரும் கர்ப்பமுற்று இறைவழியில் போரிடுகிற குதிரை வீரனைப் பெற்றெடுக்கட்டும்' என்று சொல்லிவிட்டுத் தம் துணைவியரிடம் சென்றார்கள். ஆனால், அவர்களில் ஒரேயொரு மனைவிதான் குழந்தை பெற்றெடுத்தார். அவரும் பாதி (உடல் சிதைந்த) குழந்தையைத் தான் பெற்றெடுத்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: சுலைமான்(அலை) அவர்கள் 'இன்ஷா அல்லாஹ்' (இறைவன் நாடினால்) என்று (சேர்த்துக்) கூறியிருந்தால், அவர்களின் துணைவியரில் ஒவ்வொருவரும் கர்ப்பம் தரித்து, இறைவழியில் போரிடும் குதிரைவீரன் ஒருவனைப் பெற்றெடுத்திருப்பார். புஹாரி 111

இங்கு சுலைமான் அலை அவர்கள் இன்சா அல்லா என்ற வார்த்தை பிரயோகத்தை பயன்படுத்தாத காரணத்தால்தான் இவருக்கு இந்த குழந்தை பாக்கியம் இல்லாமல் போனது என்பதை சொல்லத்தான் இந்த சம்பவத்தை இஸ்லாம் குறிப்பிடுகின்றது .மற்றும்படி அவருடைய சக்தியின் வல்லமையை குறிக்கப் பயன்படுத்தவில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்  .ஏனனில் சக்தியின் வடிவம் என்பது பொதுவாக  எல்லோருக்கும்  தெரியும்  இந்த  சக்தியின்  வடிவம்  பற்றி  பைபிளிலும்  கூறப் பட்டுள்ளது  .

இங்கு நபி ஸல் அவர்களது சமூகத்தை இந்த விடயத்தை ஒப்பிட்டு பார்த்தல் உண்மையில் இப்படி ஒரு உறவு எவ்விதத்திலும் சாத்தியமில்லை ஆனால் ஆயுள் காலம் மற்றும் சக்தி போன்ற விடயங்கள் மிகையாக கொடுக்கப் பட்டவர் ஒருவர்தான் இதை செய்ய முடியும் .எனவே தனது ஆட்சியில் பல்கிசின் ஆசனத்தை ஒரு தனி மனிதன் கொண்டு  வர முடியும் என்றால் சுலைமான் அலை அவர்களுக்கு இந்த சக்தி என்பது மிகவும் இலகுவானது எனவே இந்த சக்தியை எப்படி நாம் மற்ற சமூகங்களிடம் ஒப்பிட்டு பார்க்க முடியும் ? மூசா நபிக்கு கடலை பிளக்கும் அளவுக்கு அல்லா சக்தியை வழங்கினான் .ஈசா நபிக்கு உயிர்ப்க்கும் ஆற்றால்  வளங்கப்பட்டன. மூஸா நபியின் சமூகத்துக்கு அல்லா நாம் இன்று பார்க்கும் கார்டூன் படங்களில் வருவது போன்று உணவு வகைகள் மன்னு சல்வா என்ற ஒரு தட்டில் தினமும் வானத்தில் இருந்து அல்லாஹ்வால் இறக்கப்பட்டன.இப்படி முகம்மத் நபியுடைய சமூகம் கற்பனை பண்ண முடியாத அளவுக்கு அல்லா பல சதிகளை வளங்கி இருந்தான் .

இதனூடாக நாம் விளங்க வேண்டிய ஒரு சட்ட நுணுக்கம் என்னவென்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் .இன்றுள்ள வணக்க வழிபாடுகள் முன்னுள்ள நபிமார்களின் வணக்கங்களுடன் பெயரால் ஒன்றாக இருந்தாலும் கருத்திலும் செயல் வடிவத்திலும் வித்தியாசமானது என்பதை புரிந்து கொள்ளவேண்டும் .எனவே முன் சென்ற நபி மார்களின் வரலாறுகள் அல்லது சட்டங்கள் என்பது எமது அதாவது முஹம்மத் நபியுடைய சமூகத்துக்கு ஒரு போதும் சட்டமாகாது இதை  நாம் தெளிவாக  புரிந்து கொண்டால் இந்த பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வை  பெற்று கொள்ள முடியும்முகமத்தின் ஸல் அவர்களின் சமூக ஆயுள் மிகவும் குறைந்தது மற்றும் அல்லாஹ்வின் புறத்தில் நேரடியாக நபி ஸல் அவர்கள் பிரயோகிக்கும் அளவுக்கு கூட எவ்வித சக்தியும் வளங்கப்படவில்லை.

.இதனால்தான் சுலைமான் அலை அவர்களுக்கு அந்த சிம்மாசனத்தை கண் மூடி திறப்பதற்குள் ஒரு மனிதன் அவர் முன்னால் கொண்ட வந்தார் என்றால் அதை நாம் ஏற்றுக் கொள்கின்றோம் ஆனால் நபி ஸல் அவர்கள் சில மணித்தியாலங்கள் மேல் வானத்தை கடந்து மிஹ்ராஜ் சென்றார்கள் என்பதை நபி ஸல் மட்டுமல்ல நாங்களும் இதற்கான சான்றுகளை நிருபிக்க எவ்வளவு முயற்சி செய்கின்றோம்.இதற்கு காரணம் நபி (ஸல்) அவர்கள் சமூகத்துக்கு மற்ற சமூகங்களுக்கு கொடுக்கப் பட்ட எந்த  பலமான சக்தியும் கொடுக்கப்ப் படவில்லை இதுதான் யதார்த்தமான உண்மை. இதை அல்லாஹ்வே சுட்டிக் காட்டுகின்றான் ஆயினும், அவர் கண்டவற்றின் மீது அவருடன் நீங்கள் தர்க்கிக்கின்றீர்களா?” (53:12.) என்று அல்லா தனது திருமறையில் கேட்கின்றான் .முன்னுள்ள நபிமார்களுக்கு கொடுக்கப்பட்ட  எந்த சக்தியும் நபி (ஸல்) அவர்களுக்கு அல்லா கொடுக்காத காரணத்தாலேயே இவ்வாறு அவன் கேட்கின்றான் .
ஆனால் முன்சென்ற நபி மார்கள் இதை விடவும் அற்புதங்களை தங்களது  வாள்நாளில் செய்து கொண்டே இருந்தனர் ஆனால் அந்த நபிமார்கள் தொடர்பாக எந்தக் கேள்வியையும் கேட்கவில்லை. ஏனனில் மக்களும் அந்த நேரத்தில் சில வித்தைகளை கற்று தேர்ச்சி பெற்று இருந்தனர் இதையே நாம் மூசா நபியின் சூனியம் தொடர்பான சம்பவத்தில் கூட காண்கின்றோம்.

இதே போன்றுதான் ஏனைய  வணக்கங்களும் உதாரணமாக சொல்வதானால்  தொழுகை நோன்பு சகாத் போன்ற விடயங்கள் உட்பட அன்றாட  வாழ்வில் உள்ள திருமணம் கொடுக்கல் போன்ற நாங்கள்  தற்போது கடைபிடிக்கின்ற வணக்கங்கள் அனைத்துமே  ஆதம் நபி முதல் முஹம்மத் நபி வரை அருளப்பட்டதுதான் .ஆனால் ஒவ்வொன்றும் வித்தியாசமான  வெவ்வேறு சட்ட முறைகளோடு தான் அருளப்பட்டது. இது கால  தேச மனித சக்தி போன்ற பல பரிமாணங்களை கொண்டது.

இந்தவகையில் அல்லாஹ் வணக்கங்களையும் இவ்வாறு வித்தியாசமாகவே  அருளி உள்ளான். உதாரணமாக நபி (ஸல்)  அவர்கள் கூறும் போது "முன் சென்ற நபி மார்களுக்கு தொழுகை கட்டாயம்  வணக்க ஸ்தலங்களில் மட்டுமே    தொழ அனுமதி வளங்கப்பட்டது ஆனால்  நபி (ஸல்) அவர்கள் கூறும் போது எனக்கு பூமியில் எல்லா இடங்களும் தொழ அனுமதிக்கப் பட்டுள்ளது எவராவது ஒருவர் எந்த இடத்தில தொழுகை நேரத்தை சந்தித்தாலும் அவர் அங்கே   தொழுது கொள்ளட்டும் " என்ற இந்த நபி மொழி தொழுகை  என்பது எல்லா நபிமார்களுக்கும் ஒன்றல்ல என்பதை எடுத்துக் காட்டுகின்றது .

அதே போல் தாவூத்  நபியின் நோன்பை மற்றும் தொழுகை பற்றி கூறும் போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். "அல்லாஹ்விற்கு மிகவிருப்பமான தொழுகை தாவூது(அலை) அவர்களின் தொழுகையாகும். அல்லாஹ் விற்கு மிக விருப்பமான நோன்பு தாவூது(அலை) அவர்களின் நோன்பாகும். அவர்கள் பாதி இரவு வரை தூங்குவார்கள். பிறகு இரவில் மூன்றில் ஒரு பகுதி நேரம் தொழுவார்கள். பிறகு ஆறில் ஒரு பகுதி நேரம் உறங்குவார்கள். மேலும் ஒரு நாள் நோன்பு வைத்து ஒரு நாள் நோன்பைவிட்டு விடுவார்கள்'.

தாவூத்(அலை) அவர்களுக்கு வேதம் ஓதுவது இலேசாக்கப்பட்டிருந்தது. அவர்கள் தம் வாகனப் பிராணிக்குச் சேணம் பூட்டிடக் கட்டளையிடுவார்கள். (பணியாள்) சேணம் பூட்டி முடிப்பதற்குள் -வேதம் - முழுவதையும் ஓதிவிடுவார்கள். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

இதை அப்துல்லாஹ் இப்னு அம்ர்  ஆஸ் (ரலி) அறிவித்தார். இங்கு  தாவூத் நபியின் கடமைகளை  நபி (ஸல்) அதனை விரும்பினாலும் இங்கு இது நமக்கு சட்டம் அல்ல தாவூத் நபிக்கு கொடுக்கப் பட்ட வேதத்தை கூட அவர் ஒரு நொடிப் பொழுதில் ஒதிவிடுவார் என்றுதான் சொல்லப் படுகின்றது ஆனால் இந்த அம்சம் நபி (ஸல்) அவர்களுக்கு இல்லை ஜிப்ரயீல்தான் அவருக்கு ஓதிக் கொடுக்க வேண்டும் .

எனவே முன் சென்ற நபிமார்களுக்கு வழங்கப்பட்ட அல்லது பிரஸ்தாபிக்கப்பட்ட விடயங்களை நுணுக்கமாக சட்ட ஆய்வுக்கு உட்படுத்த கூடாது அது ஒரு வரலாற்று  படிப்பினையாக மட்டும்  எடுக்க  வேண்டும்.

சூனியம் தொடர்பாக இந்தவகையில்  சிலர் முரண்படுவது இந்த கோட்பாட்டில்  இருந்து  விலகித்தான். இதை  நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த வகையில் அல்லா பல நபிமார்களுக்கு வழங்கிய   சக்தி என்பது அந்தந்த சமூகத்தை ஒப்பிட்டுதான் பார்க்க வேண்டும் தவிர இன்றுள்ள சமூகத்தை  சட்டரீதியாக ஒப்பிட்டு பார்க்ககூடாது .எனவே சூனியம் (சிஹ்ர்) என்பது நபி ஸல் அவர்களுக்கு செய்யப்பட்டது என்பது ஒரு முறைமை முன்னுள்ள நபிமார்கள் செய்தது என்பது ஒரு முறைமை இவ்விரண்டையும் ஒன்றோடொன்று குழப்பி நாம் ஆய்வு செய்யக் கூடாது சிஹ்ர் என்ற வார்த்தை சகலருக்கும் ஒரே வார்த்தையாக பயன்படுத்தி இருந்தாலும் அதன் அர்த்தங்களும் பிரயோகங்களும் மிகவும் வேறுபாடானது என்பதை இந்த கட்டுரை  மூலம் அறிந்து கொள்ளலாம்

“எனவே ஹாரூத் மற்றும் மாரூத் என்ன செய்தார்கள் ? அவர்கள் மலக்குகளா ? அல்லது ஜின்களா? அல்லது மனிதர்களா ? எமக்கு அது விளங்கவில்லையா எது விளங்குதோ அதனோடு நிறுத்திக் கொள்ளுங்கள் அதனை கொண்டு சட்டமாக எடுப்பதற்க்கும் அதனை கொண்டு பிழையான விளக்கங்களை கொடுப்பதற்கும் எமக்கு எந்த தேவையும் இல்லை  அல்லா சொல்கின்றான் “அவன்தான் (இவ்) வேதத்தை உம்மீது இறக்கினான். இதில் விளக்கமான வசனங்களும் இருக்கின்றன. இவை தான் இவ்வேதத்தின் அடிப்படையாகும். மற்றவை (பல அந்தரங்கங்களைக் கொண்ட) முதஷாபிஹாத் (என்னும் ஆயத்துகள்) ஆகும்; எனினும் எவர்களுடைய உள்ளங்களில் வழிகேடு இருக்கிறதோ அவர்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக முதஷாபிஹ் வசனங்களின் விளக்கத்தைத் தேடி அதனைப் பின்பற்றுகின்றனர். அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் அதன் உண்மையான விளக்கத்தை அறியமாட்டார்கள். கல்வியில் உறுதிப்பாடு உடையவர்கள் அவை அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவைதான். நாங்கள் அதை நம்பிக்கை கொள்கிறோம், என்று அவர்கள் கூறுவார்கள். அறிவுடையோரைத் தவிர மற்றவர்கள் இதைக்கொண்டு நல்லுபதேசம் பெறமாட்டார்கள்.(ஆல இம்ரான் -6)

எனவே

1-காலத்துக்கு காலம் நபிமார்கள் அல்லாஹ்வால் அனுப்பப்பட்டுள்ள முறைமை அவர்களின் சமூக அமைப்புக்குக்கேற்பவே, இங்கு வயது, வளங்கப்பட்ட  சக்தி ,என்பன கவனத்தில் கொள்ளப்படவேண்டும் .

2-அல்லா நபிமார்களின் இத்தகைய வேறுபாடுகளுக்கு ஏற்ப அந்தந்த சமூகத்து அப்படியான சக்திகளை வழங்கி இருந்தான். சட்டங்களையும் அவ்வாறே வகுத்தும் கொடுத்துள்ளான்.

3-அத்தகைய சமூகங்களின்செய்திகள் வரலாறுகள் என்பன நமது சமூகத்துக்கு ஒரு முன்மாதிரியே தவிர பின்பற்றுவதற்கான ஆதாரபூர்வ முன்மாதிரியோ அல்லது சட்டமோ  அல்ல,

4-நமது வணக்க வழிபாடுகள் மற்றும் செயற்பாடுகளில் முன்னைய நபிமார்களை நாம் சட்டமாக கொள்ள நபி (ஸல்) அவர்கள் எந்த வளிமுறையையும் காட்டித்தரவில்லை.

எனவே முன்னுள்ள வேதங்களில் உள்ள அல்லது அல்குரனில் அல்லா படிப்பினையாக சொல்லும் சம்பவங்களை ஆதாரமாக எடுக்க  முனைந்தால் அது முஹம்மது நபியின் மார்க்கத்தில் தவறுகள் விட வாய்ப்புக்கள் ஏற்படும் அல்லாஹ் நம்மை இதிலிருந்து தூரப்படுத்துவானாக .